அன்று தமிழ் எத்திசையிலும் ஒலித்தது
இன்றோ திசை தெரியாமல் தவிக்கிறது
அன்று தமிழ் விரிந்து வளர்ந்தது
இன்றோ தமிழ் சுருங்கி அழிகின்றது.
வீட்டிலே வளரவேண்டிய தாய்த்தமிழை
வீதியிலே அனாதையாய் தவிக்கவிடலாமா?
தமிழர்களுக்குக் கிடைத்திட்ட தமிழ் புதையலை
தடமில்லாதபடி மண்ணிலே புதைக்கவிடலாமா?
முனைப்பாகத் தமிழை வளர்க்காவிட்டால்!
மூத்த மொழியென பட்டமே மிஞ்சும்
வரலாறு படைத்து வரும் தமிழ் மொழியை
வரலாற்றில் படிக்கும் நிலை வரலாமா?.
தமிழுக்குச் செம்மொழி சிறப்புப் போதுமா?
தவிக்கும் தமிழைக் காப்பாற்ற வேண்டாமா!
அந்நியமொழியை அரியணையில் அமர்த்தினால்
அடிமையாவோமே தமிழ்ர்கள் அனைவரும்.
தமிழ்த்தாயின் எச்சரிக்கைக் கேளாவிட்டால்
தமிழர்களில் காதில் ஒலிக்காவிட்டால்
தமிழ்மொழியின் திசை அறியாவிட்டால்
தமிழினி சொப்பனத்திலே சுகமாய் வாழும்.
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
ஆறாம் வகுப்பு படிக்கும் எனது மகளின்
தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன்.
அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது.
எனக்கு, அது தெரியாது என்பதால், அதை அவளிடமே கேட்டேன்.
உடனே அவள்.,
“1 2 3 4 5 6 7 8 9 0
என்ற எண்ணுக்கு
முறையே,
க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, ய′
என்றாள்
“இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?’ எனக் கேட்டேன்.
அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி, வாக்கியமாக்கி தமிழ் ஆசிரியை சொல்லிக் கொடுத்ததாக கூறினாள்.
அந்த வாக்கியம்..,
“க’ டுகு, 1
“உ’ ளுந்து, 2
“ங’ னைச்சு,. 3
“ச’ மைச்சு, 4
“ரு’ சிச்சு, 5
“சா’ ப்பிட்டேன்,. 6
“எ’ ன, “. 7
அ’ வன், 8
“கூ’ றினான்; 9
“ய’ என்றேன் 0
மறக்காமல் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும்👏
*தமிழை வளர்ப்போம்...*
Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்
இன்றோ திசை தெரியாமல் தவிக்கிறது
அன்று தமிழ் விரிந்து வளர்ந்தது
இன்றோ தமிழ் சுருங்கி அழிகின்றது.
வீட்டிலே வளரவேண்டிய தாய்த்தமிழை
வீதியிலே அனாதையாய் தவிக்கவிடலாமா?
தமிழர்களுக்குக் கிடைத்திட்ட தமிழ் புதையலை
தடமில்லாதபடி மண்ணிலே புதைக்கவிடலாமா?
முனைப்பாகத் தமிழை வளர்க்காவிட்டால்!
மூத்த மொழியென பட்டமே மிஞ்சும்
வரலாறு படைத்து வரும் தமிழ் மொழியை
வரலாற்றில் படிக்கும் நிலை வரலாமா?.
தமிழுக்குச் செம்மொழி சிறப்புப் போதுமா?
தவிக்கும் தமிழைக் காப்பாற்ற வேண்டாமா!
அந்நியமொழியை அரியணையில் அமர்த்தினால்
அடிமையாவோமே தமிழ்ர்கள் அனைவரும்.
தமிழ்த்தாயின் எச்சரிக்கைக் கேளாவிட்டால்
தமிழர்களில் காதில் ஒலிக்காவிட்டால்
தமிழ்மொழியின் திசை அறியாவிட்டால்
தமிழினி சொப்பனத்திலே சுகமாய் வாழும்.
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
ஆறாம் வகுப்பு படிக்கும் எனது மகளின்
தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன்.
அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது.
எனக்கு, அது தெரியாது என்பதால், அதை அவளிடமே கேட்டேன்.
உடனே அவள்.,
“1 2 3 4 5 6 7 8 9 0
என்ற எண்ணுக்கு
முறையே,
க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, ய′
என்றாள்
“இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?’ எனக் கேட்டேன்.
அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி, வாக்கியமாக்கி தமிழ் ஆசிரியை சொல்லிக் கொடுத்ததாக கூறினாள்.
அந்த வாக்கியம்..,
“க’ டுகு, 1
“உ’ ளுந்து, 2
“ங’ னைச்சு,. 3
“ச’ மைச்சு, 4
“ரு’ சிச்சு, 5
“சா’ ப்பிட்டேன்,. 6
“எ’ ன, “. 7
அ’ வன், 8
“கூ’ றினான்; 9
“ய’ என்றேன் 0
மறக்காமல் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும்👏
*தமிழை வளர்ப்போம்...*
Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்
Social Plugin